சாராயம் கடத்திய 2 பேர் கைது

நாகூரில் சாராயம் கடத்திய 2 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-20 18:45 GMT

நாகூர்:

நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் நேற்று காலை நாகூர்-ஆழியூர் பிரிவு சாலை செல்லும் வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை நிறுத்தி, அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். இதில் சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த குமார் மகன் தினேஷ் (வயது23), தஞ்சை மில்லத் தெருவை சேர்ந்த அய்யாதுரை மகன் கிஷோர் (22) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், கிஷோர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்