2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-31 20:58 GMT

மதுரை,

மதுரை சின்னசொக்கிகுளம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் மகன் சாமுவேல் (வயது 21). அவனியாபுரம், வள்ளானந்தபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் ஆகாஷ்ரகுபதி (21). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர்கள் மீது கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்