உத்தரகாண்டில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை.. கிலோ ரூ.250-க்கு விற்பனை.!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

Update: 2023-07-07 08:59 GMT

உத்தரகாசி,

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவுக்கு தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதனால், மக்கள் கவலையடைந்தனர். வரத்து குறைவு மற்றும் மழை காரணமாக விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனிடையே தக்காளி விலை சற்று குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் யாரும் எதிர்பாரா வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உத்தரகாசி மாவட்டத்தில் ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது, அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைய செய்ததுடன், தக்காளி வாங்கவே யோசிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்