ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அயோத்திக்கு 5 லட்சம் லட்டுகள் அனுப்பப்படும்- ம.பி. முதல் மந்திரி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Update: 2024-01-12 08:27 GMT

போபால்,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அயோத்திக்கு உஜ்ஜைனியின் மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து ஐந்து லட்சம் லட்டுகளை பிரசாதமாக அனுப்ப உள்ளோம் என்றும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை மத்திய பிரதேச அரசும் கொண்டாடும் என்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்