மக்களின் நலனுக்காக இரவு பகலாக உழைக்கிறார் பிரதமர் மோடி - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-12 10:40 GMT

Image Courtesy: PTI

புதுடெல்லி,

பிரதமர் மோடி மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக இரவு பகலாக உழைக்கிறார் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பங்கேற்று பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஏனென்றால், அவர் சொல்வதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்.

மேலும், பிரதமர் மோடி மக்களின் நலனை உறுதிப்படுத்துவதற்காக இரவு பகலாக உழைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்