மிசோரம் சட்டசபை தேர்தல்; வாக்களிக்காமல் திரும்பிய முதல்-மந்திரி

தொங்கு சட்டசபையாக இருக்காது. மிசோ தேசிய முன்னணியின் அரசாக அமையும். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Update: 2023-11-07 02:32 GMT

அய்ஸ்வால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலையொட்டி, வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்றனர். தங்களுடைய வாக்குகளை செலுத்த ஆர்வமுடன் காத்திருந்தனர். இதனையொட்டி, மிசோரமில் காலை 7 மணியளவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

வாக்களிக்க வந்த ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முதல்-மந்திரியான ஜொராம்தங்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, இது தொங்கு சட்டசபையாக இருக்காது. மிசோ தேசிய முன்னணியின் அரசாக அமையும். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

எனினும், மிசோரம் தேர்தலில் வாக்களிக்க சென்ற ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவரான ஜொராம்தங்கா, அவருடைய வாக்கை பதிவு செய்ய முடியவில்லை.

இதுபற்றி அவர் கூறும்போது, வாக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்களிப்பதற்காக சென்றேன். ஆனால், இயந்திரம் வேலை செய்ய முடியாத நிலையில், எனது தொகுதிக்கு சென்று காலை கூட்டம் நிறைவடைந்த பின்பு வாக்களிப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர் வாக்களிக்க முடியாத சூழலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்