காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கான லோகோ வெளியீடு

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாதயாத்திரை செல்ல உள்ளார்.

Update: 2022-08-23 08:40 GMT

புதுடெல்லி,

'இந்தியா அனைவருக்குமான நாடு' என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல உள்ளார். 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ந் தேதி நடக்கிறது.

இந்த பாதயாத்திரைக்கான முன்னேற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பாதயாத்திரையை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரைக்கான லோகோ, அடையாள முழக்கம், தீம் பாடல் ஆகியவற்றை காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று வெளியிட்டனர். மேலும் இது தொடர்பாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்