பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை பணியாளர் கைது..!

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை பகிர்ந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-09 04:33 GMT

குஜராத்,

தேச பாதுகாப்பு தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பகிர்ந்த குற்றத்திற்காக எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் நிலேஷ் வல்ஜிபாய் என்பவரை பயங்கரவாத ஒழிப்பு படை கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை, பூஜ் பகுதியில் நடந்து வரும் |புதிய கட்டுமான பணிகள் பற்றிய விவரங்களை வாட்ஸ் அப் மூலம் பாகிஸ்தானுக்கு அவர் பகிர்ந்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்