"சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்" - மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியுள்ளார்.

Update: 2023-09-12 07:42 GMT

புதுடெல்லி,

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்' என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டன. மேலும் உத்தர பிரதேசத்தில் சாமியார் ஒருவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சனாதனம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும்; கண்ணை நோண்ட வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசும் யாரும் அரசியல் அதிகாரம் அந்தஸ்த்தை தக்கவைக்க முடியாது. நமது முன்னோர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சனாதன தர்மத்தைப் பாதுகாத்தனர். சனாதனத்தை ஒழிப்பதாக பேசுபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்