ஐதராபாத்: போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

ஐதராபாத்தில் போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததையடுத்து பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

Update: 2022-11-16 10:26 GMT

ஐதராபாத்,

ஐதராபாத் போலீசாருக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது. மிரட்டல் அழைப்பு வந்ததையடுத்து, போலீசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். ஐஎஸ் சதன் சாலையில் உள்ள கோவில்கள் மற்றும் மசூதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றமும் பீதியும் நிலவியது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.

அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்