அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்

அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகள் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

Update: 2024-06-19 07:14 GMT

சண்டிகார்,

அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரண் சவுத்ரி மற்றும் அவரது மகள் ஸ்ருதி சவுத்ரி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று பா.ஜ.க மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அரியானா பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், அம்மாநில முதல்-மந்திரி நயாப் சிங் சைனி மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

கிரண் சவுத்ரி அரியானா முன்னாள் முதல்-மந்திரி பன்சி லாலின் மருமகள் ஆவார். மேலும் இவர் பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அதேபோல ஸ்ருதி சவுத்ரி அரியானா காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தவர்.

முன்னதாக, கிரண் மற்றும் ஸ்ருதி இருவரும் நேற்று காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் கட்சியின் மாநில அலகு தனிப்பட்ட துரோகமாக நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டி அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடாவை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்