மும்பையில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த கொடூரம்

குர்லாவில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2022-12-04 21:45 GMT

மும்பை,

மும்பை குர்லாவில் 42 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த 30-ந்தேதி அதிகாலை அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்துகொண்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் திடீரென அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு சத்தம் போட்டுள்ளார். இருப்பினும் அதை பொருட்படுத்தாத அவர்கள் 3 பேரும் சேர்ந்து அப்பெண்ணை பலவந்தமாக ஒருவர் பின் ஒருவராக கற்பழித்தனர். மேலும் அவருடன் தகாத உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இத்துடன் வெறி அடங்காத அவர்கள் தொடர்ந்து அந்த பெண்ணை சித்ரவதை செய்ய தொடங்கினர். தாங்கள் வைத்திருந்த சிகரெட்டால் அந்த பெண்ணின் பிறப்புறுப்பு உள்ளிட்ட அந்தரங்க பாகங்களில் சூடு வைத்தனர். மேலும் கூர்மையான கத்தியாலும் தாக்கி உள்ளனர். இந்த கொடூர சம்பவங்களை அந்த வாலிபர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார்.

பின்னர் இச்சம்பவத்தை போலீசில் தெரிவித்தால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனால் பயந்துபோன அந்த பெண் போலீசில் புகார் கொடுக்க தயங்கினார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனக்கு தெரிந்த தனியார் தொண்டு அமைப்பின் உதவியுடன் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை அடுத்து போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேர் மீதும் கொலை, கும்பல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான தகாத உறவு, ஆபத்தான ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்