கன்னித்தன்மை சோதனையில் தோல்வி... வெளியான அதிர்ச்சி தகவல்; விசித்திர தீர்ப்பு

ராஜஸ்தானில் புதுமணப்பெண்ணின் கன்னித்தன்மை சோதனை தோல்வியானதில் வெளியான அதிர்ச்சி தகவலை தொடர்ந்து பஞ்சாயத்தில் மணமகன் வீட்டாருக்கு ரூ.10 லட்சம் தர தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2022-09-05 13:49 GMT

ஜெய்ப்பூர்,



ராஜஸ்தானில் வினோத வழக்கு ஒன்று வந்துள்ளது. சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் ஆனதும், புதுமண பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்கின்றனர். இதில், அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு கன்னிகழியாமல் உள்ளார் என்று நம்பப்படும்.

ராஜஸ்தானில் இது ஒரு சமூக நடைமுறையாக குகடி பிரடா என்ற பெயரில் இருந்து வருகிறது. இந்நிலையில், பில்வாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது இளம்பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அவர், தன்னை கட்டாயப்படுத்தி கன்னித்தன்மை சோதனை செய்தனர். அதில் தோல்வி அடைந்ததும் அடித்து விரட்டுகின்றனர் என தெரிவித்து உள்ளார். அவருக்கு பகோர் நகரில் கடந்த மே 11-ந்தேதி திருமணம் நடந்து உள்ளது.

இதன்பின், அதே நாளில் இளம்பெண்ணுக்கு உடனடியாக கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் தோல்வி அடைந்து விட்டால், ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையை மணமகன் குடும்பத்தினருக்கு தர வேண்டும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கன்னித்தன்மை சோதனை மதியம் நடந்ததில், அதில் அவர் தோல்வி அடைந்த பின்னர், இரவு வரை மணமகன் வீட்டாரின் விவாதம் நீடித்து உள்ளது. பயத்தில் அந்த பெண் எதுவும் கூறாமல் இருந்து உள்ளார். அவரை கணவர் மற்றும் உறவினர்கள் அடித்து உள்ளனர்.

அந்த இளம்பெண் திருமணத்திற்கு முன்பு பக்கத்து வீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி சுபாஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு பற்றி அறிந்ததும், கன்னித்தன்மை சோதனையிலும் தோல்வி அடைந்த ஆத்திரத்தில், அவரது கணவர் மற்றும் மாமியார் அவரை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் உள்ளூர் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது. மே 31-ந்தேதி கோவிலில் நடந்த பஞ்சாயத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

இதன்பின்பு அந்த பெண்ணை வீட்டில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். இதுபற்றி தனது கணவர், உறவினர்களுக்கு எதிராக துன்புறுத்தல் மற்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதலின் கீழ் அந்த பெண் போலீசில் கடந்த சனிக்கிழமை புகார் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி போலீஸ் துணை சூப்பிரெண்டு சுரேந்திர குமார் கூறும்போது, அந்த பெண்ணின் மாமனார் தலைமை கான்ஸ்டபிளாக இருக்கிறார். சம்பவம் பற்றி அவருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல், அச்சுறுத்தல், பெண்ணின் நன்மதிப்புகளை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணமகன் வீட்டார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்