காஷ்மீர்: பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கி சண்டை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

Update: 2024-08-28 20:23 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் குஷல் பகுதியில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்புப்படையினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்