தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2024-03-09 15:43 GMT

புதுடெல்லி,

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அருண் கோயலின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அருண் கோயல் பதவி விலகியுள்ளதால் தேர்தல் ஆணையர் காலிப்பணியிடங்கள் 2 ஆக உயர்ந்துள்ளது.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், அருண் கோயல் பதவி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமாவின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அருண் கோயலின் பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசின் செயலாளராக இருந்த அருண் கோயல், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தின்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்