அசாமில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

அசாம் மாநிலம் தர்ராங்கில் இன்று நண்பகல் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-12-29 10:44 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலம் தர்ராங்கில் இன்று நண்பகல் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நண்பகல் 12.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்