உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-08-25 23:11 GMT

டேராடூன்,

உத்தரகாண்டில் கடந்த வாரத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் புதையுண்டனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட மறுநாளில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு இருந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருந்தனர். அடுத்தடுத்த நாட்களிலும் சிலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. பைஸ்வார் என்ற இடத்தில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டேராடூன் மற்றும் டெக்ரி மாவட்டங்களில் தலா 4 பேரை இதுவரை காணவில்லை. அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்