தேர்வு அறையில் 50 மாணவிகளை கண்டு ஷாக் ஆன பிளஸ் 2 மாணவர்...! மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தேர்வு எழுத 50 மாணவிகளுக்கு நடுவில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் அமர வைக்கப்பட்டதால் பதற்றத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Update: 2023-02-02 09:39 GMT

பாட்னா,

பீகாரில் உள்ள தனியார் கல்லூரியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் மணி சங்கர். இவர் நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுதச் சென்றார். அங்கு 50 மாணவிகள் தேர்வெழுத வந்திருந்தனர். மாணவர் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில், தான் ஒரே ஒரு மாணவராக அமர வைக்கப்பட்டார். இதை அறிந்ததும் அவருக்கு வியர்வை கொட்டியது. பதற்றத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பதற்றம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக, மணி சங்கரின் உறவினர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்குக் காய்ச்சல் உண்டானது. இதனால் மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்