75-வது சுதந்திர தினம்: உத்தரபிரதேசத்தில் மூவர்ண நிறத்தில் உணவு தயாரித்து வழங்கும் உணவகம்...!

75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

Update: 2022-08-10 04:50 GMT

லக்னோ,

இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

75-வது சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அனைவரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இந்த நிலையில் நாடு முழுவதும் தபால் துறையினர் மற்றும் இதர மத்திய அரசு துறையினர் பிரபாத் பேரி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் வகையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உணவகம் ஒன்றில் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர். இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி உண்டு வருகின்றனர். மேலும் அந்த கடையை நடத்தி வரும் உரிமையாளர் முன்னாள் ராணுவ வீரர் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்