ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் சாவு

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

Update: 2022-05-02 16:36 GMT
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள நீலகிரி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் இந்திரபிரசாத் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியரக வேலை செய்து வந்தார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் நேற்று முன்தினம் கெலமங்கலத்தில் இருந்து ராயக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வரகானப்பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இந்திரபிரசாத் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் இந்திரபிரசாத் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது இந்திரபிரசாத் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்