மின்னல் தாக்கி பெண் பலி

தேவூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.

Update: 2022-04-29 20:42 GMT
தேவூர்:-
தேவூர் அருகே காவேரிப்பட்டி ஊராட்சி மோட்டூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மனைவி வளர்மதி (வயது 40). 2 பேரும் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தேவூர் பகுதியில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது வளர்மதி மேய்ச்சலுக்கு விட்டு இருந்த ஒரு ஆட்டை பிடித்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் கருப்பண்ணன், கிராம உதவியாளர் முருகன் மற்றும் வருவாய்த்துறையினர், தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின்னல் தாக்கியதில் ஒரு ஆடும் பலியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்