காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

பெரும்பாறை அருகே காட்டு பன்றி தாக்கி விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-04-13 17:09 GMT
பெரும்பாறை : 

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி பெரும்பாறை அருகே உள்ள பூலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை அதே பகுதியில் தோட்ட வேலைக்கு சென்றார். அப்போது புதருக்குள் இருந்து வந்த காட்டு பன்றி அவரை தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பூலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

மேலும் செய்திகள்