மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீள மலைப்பாம்பு

மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் தண்ணீர் தொட்டியில் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.

Update: 2022-01-23 21:23 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையத்தில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்குள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று தவறி விழுந்தது. அது தொட்டியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்த ஊழியர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த அந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து வனப்பகுதியில் அந்த மலைப்பாம்பு விடப்பட்டது.

மேலும் செய்திகள்