நடைபயிற்சி சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

ஜோலார்பேட்டை அருகே நடைபயிற்சி சென்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-01-23 17:37 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ஜெயமாதா நகர் பகுதியை சேர்ந்த ரபீக் என்பவரின் மகன் அமீன் (வயது 24). இவர் புத்துக்கோயில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

பெரியகம்மியம்பட்டு அண்ணாநகர் அருகே சென்றபோது நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ராமர் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன், அமீன் ஆகியோர் மீது மோதியது.

படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இவர்களில் பாலமுருகன் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும், அமீன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 

பின்னர் அமீன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமீன் இறந்து விட்டார்.

 இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்