பள்ளிக்கூட சுவர் இடிந்தது பற்றி முழுமையான விசாரணை - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பள்ளிக்கூட சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Update: 2021-12-17 20:51 GMT
நெல்லை:
நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சிகிச்சை பெறும் மாணவர்களை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பார்த்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் தமிழக அரசு காயம் அடைந்தவர்களுக்கு அறிவித்த ரூ.3 லட்சம் நிதியை பெற்றோரிடம் வழங்கினார்கள். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், உடனே இங்கு வந்து பார்வையிட்டு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறி உள்ளோம்.
மேலும், இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கும் அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கி உள்ளோம்.

சுவர் இடிந்து மாணவர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை, தாளாளர், அந்த கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை நடத்தப்படும்.

இதுபோன்று தரம் குறைந்த பள்ளி கட்டிடங்கள் வேறு எங்கேனும் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களின் தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்