தக்கோலத்தில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

Update: 2021-07-28 17:42 GMT
அரக்கோணம்

அரக்கோணம் அடுத்த தக்கோலம் பாண்டியம்மா கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 25). மின் வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பத்தில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். 
இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்