விதிமீறிய 708 பேர் மீது வழக்கு

விதிமீறிய 708 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-29 17:11 GMT
கமுதி, 
கமுதி பகுதிகளில் போலீசார் 2 நாள் அதிரடி சோதனை நடத்தி 708 பேர் மீது வாகன விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணியாது இருத்தல், காரில் குறுக்கு பெல்ட் அணியாது இருத்தல், உரிமை புதுப்பிக்காமல் இருந்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா உத்தரவில் கமுதி, அபிராமம், பெருநாழி, கோவிலாங்குளம், மண்டலமாணிக்கம் ஆகிய போலீஸ் சரகங்களில் கண்டுபிடிக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் 708 பேர் மீதும் வாகன விதிமீறல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்