தென்காசி மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-28 20:31 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளில் தனிமைபடுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,464 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,795 பேர் சிகிச்சையால் குணமடைந்து உள்ளனர்.
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1,495 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 174 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்