பெண்ணிடம் பணம், நகை திருட்டு

பெண்ணிடம் பணம், நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

Update: 2021-04-28 18:07 GMT
ராமநாதபுரம், 
 தங்கச்சிமடம் பாலன் நகரை சேர்ந்த சார்லஸ் என்பவரின் மனைவி குழந்தை தெரசா (வயது 38). இவர்  ராமநாதபுரம் வந்து விட்டு திரும்பி ஊர் செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி உட்கார்ந்தார். அப்போது அவர் வைத்திருந்த பர்சை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் ரூ.90 ஆயிரம் பணம் மற்றும் ½ பவுன் மோதிரங்கள் இருந்தது. பர்சினை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தை தெரசா இதுகுறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்