திருட்டு வழக்கில் வாலிபர் கைது

திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2021-04-28 16:35 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டினம் வெள்ளிமேடுப்பேட்டை் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தாதாபுரம் கூட்ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்தனர். அதில், அவர்  ஜக்காம்பேட்டை குளக்கரை தெருவை சேர்ந்த கலைச்செல்வன் மகன் தாமோதரன் (வயது 34) என்பது தெரியவந்தது.

மேலும் கடந்த  17-ந்தேதி வெள்ளிமேடுப்பேட்டை அடுத்த பெருமாள்பேட்டையை சேர்ந்த ஜோதி மனைவி ரோஸ் (34) என்பவரது வீட்டு பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் மற்றும் 7 பவுன் நகையை திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது தெரியவந்தது.

  அதேபோல்,  மயிலம் பகுதியில் 2 வீடுகளில் ரூ.9 ஆயிரம், ஒருபவுன் கம்மல் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து  ரூ.45 ஆயிரம், 5 பவுன் நகையை பறிதல் செய்தனர்.

மேலும் செய்திகள்