மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

மானூர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-27 00:06 GMT
மானூர்:
மானூர் அருகே உக்கிரன்கோட்டை சர்ச் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருடைய மனைவி பாப்பா (வயது 75). மைக்கேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாப்பா தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் நேற்று மதியம் வீட்டில் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்