சேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

சேலத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

Update: 2021-02-25 22:08 GMT
சேலம்:
சேலம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள சுவிட்சை போடும் போது, அவரது உடலில் திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்