சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு

Update: 2021-02-25 20:20 GMT
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்கநாதாபுரத்தைச் சேர்ந்த காளியப்பன்(வயது 32) சிகிச்சை பலனின்றி ேநற்று உயிரிழந்தார். இதனால் வெடிவிபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்