ஏர்வாடி அருகே டிரைவர் கொலையில் தப்பி ஓடிய நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

ஏர்வாடி அருகே டிராக்டர் டிரைவர் கொலையில் தப்பி ஓடிய நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Update: 2019-12-08 22:00 GMT
ஏர்வாடி, 

ஏர்வாடி அருகே டிராக்டர் டிரைவர் கொலையில் தப்பி ஓடிய நபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

டிராக்டர் டிரைவர் கொலை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நல்லான்குளத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 51). டிராக்டர் டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது பெற்றோர் ஊரான ஆனைகுளத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரன் அதே பகுதியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு சிலருடன் தங்கி வேலை பார்த்து வந்தார். பின்னர் இரவில் அங்கு அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சந்திரன் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாயமான நபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சந்திரன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் சந்திரனுடன் தங்கி இருந்த மற்றொரு நபர் மாயமாகி உள்ளார்.

எனவே அவர் தான், சந்திரனை கொலை செய்து விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை பிடித்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்