நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது

நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

Update: 2019-10-24 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி வருங்கால வைப்பு நிதி உங்கள் கையில் என்ற தலைப்பில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி வருகிறார். வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று நெல்லை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் மண்டல ஆணையாளர்-1, வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்.ஜி.ஓ. ‘பி‘ காலனி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

31-ந் தேதிக்குள்...

மனு மேலே வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் என்று குறிப்பிட்டு மனுதாரர்களின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். மனுக்கள் வருகிற 31-ந் தேதிக்குள் இந்த அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். கீழ்கண்ட அட்டவணைப்படி கூட்டம் நடைபெறும். வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழிலதிபர்களுக்கு மதியம் 2 மணி முதல் மதியம் 3 மணி வரையும், வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெற உள்ளது. மனு அனுப்பியவர்கள் அட்டவணைப்படி மண்டல ஆணையாளரை சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்