வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-09-19 21:45 GMT
பேட்டை,

பேட்டை அருகே உள்ள மேலக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் மகன் நம்பிதாஸ் (வயது 21). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த நம்பிதாஸ், சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நம்பிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விபி‌‌ஷ்ணன் மனைவி தர்‌ஷினி (28). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் தர்‌ஷினி உடல் பருமனாக காணப்பட்டார். இதனால் அவர் உடல் எடையை குறைப்பதற்காக மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை விபி‌‌ஷ்ணன் கண்டித்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட தர்‌ஷினி நேற்று முன்தினம் வீட்டில் ஹேர்டையை (வி‌‌ஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தர்‌ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்