நெல்லையில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
பேரறிஞர் அண்ணா 111-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆவின் தலைவர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.- அ.ம.மு.க.
தி.மு.க. சார்பில் நெல்லை மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப.சீதாராமன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.