மோகனூர் அருகே, வேன் மோதி மதுக்கடை ‘பார்’ ஊழியர் பலி

மோகனூர் அருகே, வேன் மோதி மதுக்கடை ‘பார்’ ஊழியர் பலியானார்.

Update: 2019-02-10 21:30 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள லத்துவாடியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 50). இவர் அணியாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடை பாரில் ஊழியராக வேலைசெய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அணியாபுரத்திலிருந்து லத்துவாடிக்கு பஸ்சில் சென்று லத்துவாடி மதுரை வீரன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அங்கிருந்து ரோட்டை கடக்க முயன்றார்.

அப்போது மோகனூர் பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த வேன் ஒன்று இவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர் தங்க வேலை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தங்கவேல் மனைவி ஜெயலட்சுமி மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இறந்துபோன தங்கவேலுக்கு ஒரு மகனும், இரண்டு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்