நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கூட்டுறவு ஊழியர் சாவு

நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: கூட்டுறவு ஊழியர் பரிதாப சாவு

Update: 2017-03-08 21:45 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக வேலை செய்து வந்தவர் நடேசன் (வயது 55). இவர் நேற்று இரவு கவரைப்பேட்டை சத்யவேடு சாலை வழியாக மாதர்பாக்கத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அவர் சூரவாரிக்கண்டிகை கிராமம் அருகே செல்லும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்