செங்கம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் 4 பேர் கைது

செங்கத்தை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது.

Update: 2017-01-18 20:15 GMT

செங்கம்,

செங்கத்தை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதனை காண செநாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய வாலிபரும், அவரது நண்பர் முருகன் (வயது 20) என்பவரும் வந்திருந்தனர். அப்போது இவர்களுக்கும், கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (22), ஜெயமூர்த்தி (23) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுகுறித்து செங்கம் போலீசில் ராஜதுரை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 17 வயதுடைய வாலிபரையும், முருகனையும் கைது செய்தனர்.

இதேபோல, கீழ்நாச்சிப்பட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் விழாவை நடத்த ஏற்பாட்டுக்கு துணை புரிந்ததாக செநாச்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (29), வெங்கடேசன் (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்