அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஓசூரில் தண்ணீர் பந்தல் கேபிமுனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தா


அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஓசூரில் தண்ணீர் பந்தல் கேபிமுனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தா
x
தினத்தந்தி 12 April 2022 5:53 PM GMT (Updated: 12 April 2022 5:53 PM GMT)

அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் ஓசூரில் தண்ணீர் பந்தலை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், ஓசூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஓசூர் பஸ் நிலையம் அருகே நடந்த விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராமு வரவேற்றார். இதில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி பழம், ஆகியவற்றை வழங்கினார்.
இதேபோல், ஓசூர் ரெயில் நிலையம் அருகே 38-வது மற்றும் 39-வது வார்டு அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குடிநீர், இளநீர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட துணை செயலாளர் கே.மதன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிகளில், ஓசூர் மாநகர செயலாளர் நாராயணன், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், அக்ரோ தலைவர் ஹரிபிரசாத், சிவலிங்கம், சுரேஷ், ஹேமகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி அ.தி.மு.க. மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story