ஐபிஎல்: சென்னை வந்தடைந்த மும்பை அணியினர்

23-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் சந்திக்கின்றன;

Update:2025-03-20 22:00 IST
ஐபிஎல்: சென்னை வந்தடைந்த மும்பை அணியினர்

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பகற்காக மும்பை அணி வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் மும்பை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்