190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷியா - உக்ரைன்

ரஷியாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன.

Update: 2024-10-20 00:23 GMT

மாஸ்கொ,

நேட்டோ என்ற நாடுகளின் கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தனது எல்லைப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என நினைத்த ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய தயாரானது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த போர் முடிவுக்கு வந்த பாடில்லை.

உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ஆரம்பத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் எதிர் தாக்குதல் நடத்தப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்த போரால் இருநாடுகளில் உள்ள மக்கள் தொகையில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷியா மற்றும் உக்ரைன் இடையே சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஷியா தரப்பில் பிடித்து வைக்கப்பட்டு இருந்த 95 உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டனா். இதேபோல் ரஷ்ய வீரர்கள் 95 பேரையும் உக்ரைன் விடுவித்து உள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனுடன் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் கீழ், எங்களிடம் இருந்த 95 உக்ரைன் போா்க் கைதிகள் அவா்களது தாய் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனா். அதற்குப் பதிலாக, அதே எண்ணிக்கையிலான ரஷிய போா்க் கைதிகள் எங்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட போர்க்கைதிகள்  மகிழ்ச்சியாக சொந்த நாடுகளுக்கு திரும்பினர் . ஏற்கனவே ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 203 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்