பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 4 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தன்ர்.

Update: 2024-10-24 20:53 GMT

லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் டாராபன் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்