கன்னியாகுமரி - சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கன்னியாகுமரி - சார்லபள்ளி இடையே கோடைகால சிறப்பு வாராந்திர ரெயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.;

கன்னியாகுமரியில் இருந்து சார்லபள்ளிக்கு செல்லும் வாராந்திர ரெயில் வியாழன் காலை 9.15க்கு புறப்பட்டும். அதேபோல் மறுமார்க்கத்திலும் சார்லபள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர ரெயில் வியாழன் மாலை 3.45க்கு புறப்படும்.
இந்த நிலையில் கோடைகால பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது:-
கன்னியாகுமரியில் இருந்து சார்லபள்ளிக்கு செல்லும் (வண்டி எண். 07229) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் - 04, 11, 18, 25, மே - 02, 09, 16, 23, 30, ஜூன் - 06, 13, 20 27, ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) காலை 05.15 மணிக்கு புறப்பட்டும். என ரெயில்வே அறிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில் சார்லபள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் (வண்டி எண். 07230) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற ஏப்ரல் - 02, 09, 16, 23, 30. மே - 07,14, 21, 28 , ஜூன் - 04, 11, 18 , 25 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இரவு 9.50 மணியளவில் புறப்படும்.
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 21.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ரெயிலானது கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக சார்லபள்ளிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.