காரில் அழைத்து சென்று கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

என்ஜினீயரிங் கல்லூரியின் அருகில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது.

Update: 2024-10-22 21:24 GMT

கோவை,

கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த 20 வயது மாணவி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியின் அருகில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் சக மாணவிகளுடன் மாணவி தங்கி இருந்தார். ராஜ்குமார் என்பவர் விடுதி உரிமையாளர் இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவியை மட்டும் தனியாக தனது காரில் கல்லூரிக்கு அழைத்துச்சென்றார். அப்போது திடீரென்று ராஜ்குமார், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ராஜ்குமாரை எச்சரித்தும் அவர் விடாமல் வலுக்கட்டாயமாக அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அத்துடன் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். அவர் கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்ததும் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி உரிமையாளர் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் விடுதியில் தங்கி படித்து வரும் மற்ற மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்