இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.;

சென்னை,
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டு திட்ட அட்டவணையில் , "இந்த ஆண்டில் தோராயமாக 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.
