கிருஷ்ணகிரி நா.த.க நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் - சீமான் அறிவிப்பு

கிருஷ்ணகிரி நாதக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

Update: 2024-08-18 03:22 GMT

கிருஷ்ணகிரி,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

"கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த கா.அ.சிவராமன் (30357937718) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்