லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்

திருநள்ளாறு நெய்வாச்சேரி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-26 17:15 GMT

கோட்டுச்சேரி

திருநள்ளாறு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் திருநள்ளாறு வி.ஐ.பி. விருந்தினர் மாளிகை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருநள்ளாறு நெய்வாச்சேரி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற சங்கர் (வயது 40) என்பதும், தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு, செல்போன், ரூ.250 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்