ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் செடல் உற்சவம்

அரியாங்குப்பம் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-08-04 17:40 GMT

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அருகே டோல்கேட் கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் ஆடி மாத செடல் உற்சவ விழா நடந்தது. இதையொட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர், திருவிழா குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்